Tuesday, November 22, 2016

எழுத்து (யாப்பிலக்கணம்) என்பது என்ன ?

எழுத்து (யாப்பிலக்கணம்) 
  •       யாப்பிலக்கணத்தில் செய்யுள் அல்லது பாக்களுக்கு அடிப்படையாக        அமையும் உறுப்பு எழுத்து ஆகும்.
  •      இங்கே எழுத்து என்பது மொழியைஎழுதுவதற்குப் பயன்படும்    குறியீடுகளையன்றி அவற்றினால் குறிக்கப்படும் ஒலிகளையே குறித்து    நிற்கின்றது. 
  •   செய்யுள்களைப் பொறுத்தவரை மொழியின் ஒலிப் பண்புகள் சிறப்புப்    பெறுகின்றன. 
  •      இதனால் இந்த ஒலிப் பண்புகளுக்கு ஆதாரமாக அமையும் எழுத்துக்களை,
  •  அவற்றை ஒலிப்பதற்குத் தேவையான கால அளவுகளைக் கருத்தில் கொண்டு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.
  • எழுத்து வகைகள்

    தமிழில் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. 
  • இவற்றுள்  முதல்  வரையான 12 உயிரெழுத்துக்கள் அவற்றுக்குரிய கால அளவுகளுக்கு அமைய குறில்நெடில் என இரண்டாக வகுக்கப்படுள்ளன. 
  • க் முதல் ன் வரையான 18 மெய்யெழுத்துக்களில் குறில்நெடில் என்ற வகைப்பாடு கிடையாது. 
  • மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து உருவாகும் 216 உயிர்மெய் எழுத்துக்கள்அவற்றில் அடங்கியுள்ள உயிரெழுத்துக்களின் வகையைப் பொறுத்துக் குறிலாகவோ நெடிலாகவோ அமைகின்றன.
          
எழுத்துவகைஎழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள்-
1குறில்கள்அ, இ, உ, எ, ஒ
2நெடில்கள்ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
மெய்யெழுத்துக்கள்க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
உயிர்மெய் எழுத்துக்கள்-
1குறில்கள்உயிர்க்குறில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்
2நெடில்கள்உயிர்நெடில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்
Share:

0 comments:

Post a Comment

Blog Archive