Wednesday, November 23, 2016

உரிச்சொல் என்றால் என்ன?

உரிச்சொல்:

  •   மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல்.
  உதாரணம் :சாலப் பெரிது – உரிச்சொல்

   உரிச்சொல் இருவகைப்படும்

  • ஒருபொருட்குறித்த பலசொல்
  • பலபொருட்குறித்த ஒருசொல்
சான்று:
ஒரு பொருள் குறித்த பல சொல்
  • சாலப்பேசினான்.
  • உறுபுகழ்.
  • தவஉயர்ந்தன.
  • நனிதின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரேபொருளையுணர்த்துவன.

பலபொருட்குறித்த ஒருசொல்

  • கடிமனை - காவல்
  • கடிவாள் - கூர்மை
  • கடிமிளகு - கரிப்பு
  • கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும்வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பலபொருள்களையுணர்த்தும்


உரிச்சொல் பண்புகள் :  

உயர்திணை பண்புகள்

அஃறிணை பண்புகள்
இரண்டிற்கும் பொதுவான பண்புகள்:

Share:

1 comment:

Blog Archive