Tuesday, November 29, 2016

பத்துப்பாட்டு நூல்கள்


                                                  பத்துப்பாட்டு நூல்கள்

                                                              திருமுருகாற்றுப்படை
                                                              பொருநராற்றுப்படை
                                                              சிறுபாணாற்றுப்படை
                                                              பெரும்பாணாற்றுப்படை
                                                              நெடுநல்வாடை
                                                              குறிஞ்சிப் பாட்டு
                                                              முல்லைப்பாட்டு
                                                              மதுரைக் காஞ்சி
                                                              பட்டினப் பாலை
                                                              மலைபடுகடாம்
Share:

எட்டுத்தொகை நூல்கள்

                                                எட்டுத்தொகை நூல்கள்

                                                              நற்றிணை
                                                             குறுந்தொகை
                                                              ஐங்குறுநூறு
                                                              பதிற்றுப்பத்து
                                                              பரிபாடல்
                                                             கலித்தொகை
                                                             அகநானூறு
                                                              புறநானூறு
Share:

இலக்கியம்


                 தமிழ்இலக்கியம் 
     
      

       வரலாறு : 

  •    தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. 
  •    தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. 
  •  தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.   இலக்கியம்:மனிதனின் மொழியோடு தொடர்புடையது, மனிதன் சிந்தனைக்கும் உணவுக்கும் கற்பனைக்கும் அமைவது, ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்டது.
  • கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், கட்டுரை,வசனக்கவிதை.நாட்டுப்புறப்பாடல், விடுகதை.
  •   இலக்கியம் = இலக்கு + இயம்
  •   இலக்கு - இலச்சியம்
  •   இயம் -இயம்புதல்

       இலக்கியத் தோற்றம்
  •  மக்கள் தம் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் எடுத்துக்காட்ட விழதலே இலக்கியத் தோற்றத்திற்குக் காரணமாகும்.
  •    மக்கள் தம் கருத்துகளைப் பிறருக்கு எடுத்துக் கூறி, பிற எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அறிந்து கொள்வதில் விருப்பம் கொள்கின்றனர்; கண்டு இன்புறுகின்றனர். அவற்றைப் பிறருக்குக் கூறி படிப்பினையை உணர்த்துகின்றனர். இதனால்தான் சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை போன்ற காப்பியங்கள் பிறந்தன.
  •    ‘கார்டினல் நியூமன்’ என்பவர், உள்ளத்தைத் திறப்பதற்கும், திருத்துவதற்கும்,செம்மைபடுத்துவதற்கும், புரிந்து கொண்டு படிப்பதை உள்வாங்கி, தவறுகளில் போக்கும் வன்மை உண்டாவதற்கும், பிறரை நல்வழிபடுத்துவதற்கும் இலக்கியம் பயன்படல் வேண்டும் என்கிறார்.



ப                         பல்வேறு அறிஞர்களின் கருத்துகள்

  ரெனவெல்லக், ஆஸ்ட்டின் வாரென்
கற்பனையோடு தொடர்புடையதாய் உள்ளத்தையும், ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களின் பண்பாட்டுக் கருத்துகளைத் தாங்கி வருதல்.
 ஹட்சன்
வாழ்க்கையில் மனிதர்கள் கண்டவை; அனுபனவித்தவை; உடனடியாகக் கவர்ச்சி ஊட்டுபவை; சிந்தித்தவை; உணர்ந்தவை ஆகும்.
  டாக்டர் ச்.வே. சுப்பிரமணியன்
இலக்கு + இயம். தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
இலக்கு ; விளக்கம், நோக்கம், கொள்கை, குறிக்கோள்.
இயம் ; ஒலிப்பது, கூறுவது, வெளிப்படுத்துவது
-     நம் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் இயம்புவது- விளக்குவது இலக்கியம் என்கிறார்.


இலக்கியக் கூறுகள்

உறுப்புகள் - கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம்

  கருத்து:

  •       கருத்து, கருப்பொருள், பாடுபொருள் ஆகியவை ஒரு பொருள் குரிப்பவை.
  •       இலக்கியப் படைப்பாளர்கள் தங்களின் பட்டறிவையும் உணர்ந்தவற்றையும் பிறரோடு பகிர்வதற்கும் படிப்பனை உணர்த்துவதற்கும் விரும்புகின்றனர். அந்தப் படிôபினையே கருத்து ஆகும்.
  •      எந்த வடிவில் இலக்கியமானாலும், அதனுள் கருத்து அவசியம் இருத்தல் வேண்டும்; மானிட சமுதாயத்தைச் செம்மைப் படுத்தி  அறவழி வாழ துணைபுரியும்

கற்பனை:
    பகுத்தறிவைக் கொñடு , காரணம் காணும் அறிவு கொண்டு கலைகளைப் படைத்தல் இயலாது என்கிறார் கீட்ஸ்.
    எண்ணி எண்ணிச் சிந்தனையில் வாழ்வதைவிட, உணர்ந்து உணர்ச்சியில் வாழும் வாழ்வே வேண்டும் என அவர் ஏங்கியதற்குக் காரணம் உள்ளம் விரும்புமாறு அமையும் கற்பனை அவரிடம் சிறந்திருந்தமையே ஆகும்.
      ரிச்சர்ட்ஸ் என்பவர் கற்பனை உணர்த்தும் சொல்லுக்கு அறுவகை பொருள் தருகின்றார்.
·         மனிதக்கண்ணில்  பொருள் காணுதல்
·         உவமை உருவகம் முதலியவற்றால் பொருûகளை உருவாக்கிக் காணுதல்
·         பிறருடைய மனநிலையை~ இன்பத்துன்பங்களை உணர்தல்
·         வெவ்வேறாக உள்ள பொருள்களை இயைத்துக் காணுதல்.
·         வாழ்க்கையின் அனுபவத்தை வெவ்வேறுவகையில் அமைத்துக் காணுதல்.
·         பொருள்களை உள்ளவாறே உணரும்போது, மாறுபட்ட பொருள்களை நிறுத்தக் காணல்.
    உள்ளவாறு அமையும் கற்பனைக்குப் பொருள்களை ஒழுங்கு படுத்தலும் அழகுற அமைத்தலும் தேவை; உள்ளம் விழையுமாறு அமையும் கற்பனைக்கோ, உள்ளவற்றின் சிலவற்றைக் கூட்டலும் கழித்தலும் தேவையாகின்றன.

 உணர்ச்சி
    ஐந்து வகையான உணர்ச்சிகள் இலக்கியம் நொடிது வாழும் என்கிறார் வின்செஸ்டர்.

 ·         நியாயமான, தக்க உணர்ச்சி, நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமைவது.
·         ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டியது; ஆழம் உடையது.
·         தொடர்ந்து ஒரு நிலையாக அமையும் உனர்ச்சி; பொருந்ததாதும் வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது; வலிந்து கொñடு வரப்படாமல் இயல்பாக அமைவது.
·          வாழ்க்கையில் பல கோணங்களை விளக்குமாறு பலவகை உணர்ச்சிகள் கூடி அமைதல்
·         மிக விழுமிய உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள் காரணமாகவோ, புலனின்பம் காரணமாகவோ அமையும் உணர்ச்சிகளைவிட உயர்வுடையதாய். நீதியின் காரணமாகவோ அறத்தின் காரணமாகவோ அமைதல்.

                     பல்வகை உணர்ச்சிகள் - மகிழ்ச்சி, வேடிக்கை, கவலையற்ற மனநிறைவு முதலியவற்றை விட அச்சம் துயரம், கவலை போன்ற உணர்ச்சிகளையுடைய இலக்கியம் மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றது.
      ஷேக்ஸ்பியர் இன்பியல் நாடகத்தைவிட துன்பியல் நாடகங்கள் போற்றப்படுகின்றது என்கிறார்.
      கலைஞர்களின் உள்ளம் அச்சம், துயரம் முதலிய உணர்ச்சிகளால் பெரிதும் தாக்குண்டு ஆழ்ந்து உணரும் நிலை எய்துகிறது. அந்த உணர்ச்சிகள் ஆழமும் ஆற்றலும் உடையவனாக அமைகின்றன.
   வின்செஸ்டர் - பாட்டில் உணர்ச்சியை அமைக்கும் புலவர் பாட்டின் வடிவத்திலும் அமைக்கலாம்; பாட்டின் பொருளிலும் அமைக்கலாம்.
      பாட்டில் சொற்பபொருளிலும் கருத்திலும் உணர்ச்சியை அமைத்தலே, அதன் வடிவத்தில் அமைத்தலைவிட சிறந்தது என்கிறார்.
     உணர்ச்சி பாட்டின் வடிவத்திலும் பொருளிலும் ஒருங்கே புலப்படுமாறு அமைந்த பாட்டே சிறந்தது.

 வடிவம்
      ஒருவரின் உள்ளத்தின் துயரம் அவருடைய கண்ணீரில் புலப்பட, அந்தக் கண்ணீரைக் கண்ட மற்றொருவரின் உள்ளத்தைத் தாக்குவது போல கலைஞரின் உணர்ச்சி அனுபவம் அவர் படைத்த கலையின் வடிவத்தில் புலப்பட, அதை கற்பவரின் உள்ளத்திலும் அதே அனுபவம் விளங்குகிறது. ஆகவே, அனுபவம் ஓர் உள்ளத்திலிருந்து மற்றோர் உள்ளத்திற்குப் பரவுவதற்குக் கலையின் வடிவம் பயன்படுகிறது.

 தமிழ் இலக்கிய அறிமுகம்
·         சங்கக் காலம் ~ மூவேந்தராட்சி பொற்காலம்
·         சோழர் காலம் - சோழ வேந்தர் ஆட்சி நற்காலம்
·         தற்காலம் - குடியாட்சி மறுமலர்ச்சி ஆட்சி காலம்
·         சங்க மருவிய காலம் ~ இருண்ட காலம்
·         பிற்காலம் ~ வறண்ட காலம்

  சங்க காலம் (கி.மு. 500 - கி.பி.200)
  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சமுதாயப்பாடல்களாக அமைந்தன.
  பாடற்பொருளாகì காதலும் வீரமும் அமைந்தன.
  புறமாகிய  இயற்கை சூழலும், அகமாகிய அன்றாட வாழ்வு முறையும் நிலையாகக் கொண்டு, அகம், புறம் எனும் இரு திணைகளாகத் பிரிக்கப்பட்டன.
  இக்கால பிற்பகுதியில் தொல்காப்பியம், பதினெண் மேற்கணக்கு நூல்கள் விளங்குகின்றன.
  சங்க மறுவிய காலம் (கி.பி.200 - 600)

  •              இருண்ட காலம் எனலாம்
  •   பதினெண் கீழ்க்கணக்கு தோன்றின. அவை திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது, களவழி நாற்பது ஆகும்.

 பல்லவர் காலம் (கி,பி. 600 - 900)

  •   பக்தி இலக்கிய காலம் அல்லது சைவ வைணவ காலம் எனலாம்.
  •  சைவ சமயத்தை வளர்த்த சிவனடியாளர்களான திருஞானசம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகும்.
  •        பன்னிரு திருமுறைகளில் இவர்கள் பாடிய பாமாலைகள் எட்டு திருமுறைகளாகும்.
  •   திருமூலர் இயற்றிய திருமந்திரம் வெளிவந்தது.
  •        காரக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி இயற்றியவர்.

  சோழர் காலம் (கி.பி 900 - 1300)
 காப்பியக் காலம் எனலாம்.
 ஐம்பெருங்காப்பியங்கள் தோன்றின.
 ஐஞ்சிறுகாப்பியங்கள் - உதய குமாரகாவியம், நானக்குமார காவியம், யாசோதர காவியம், சூளாமணி, நீலகேசி தோன்றின.
  நாயக்கர் காலம் (கி.பி.1300 - 1750)
  பிரபந்த காலம் அல்லது உரையாசிரியர் காலம் எனக் குறிகலாம்.
  சிற்றிலக்கியங்கள் அதிகமாகத் தோன்றின.
 மாணிக்கவாசகர் திருகோவையார் என்ற நூலை அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதி பொருள்கள் அமைந்துள்ளன.
  சேதுபதிகள் காலம் ( 1750-1947)

 நாயக்கர், மராத்தியர் ஆட்சியில் மொழிக்கு முதன்மை தந்தவர்.

ஐரோப்பியர் காலம் ( 1750 – 1947)
  சமயக் கலப்புக் காலம் அல்லது உரைநடைக்காலம் என்பர்.
தற்காலம் 1750 – 2000)

  •                  மறுமலர்ச்சிக் காலம் எனலாம்.
  •   சொற்பொழிவு நூல்கள், உரைநடை, கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம், ஆய்வரங்கம், குழந்தை இலக்கியம், கடித இஅல்க்கியம், தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு, இலக்கியத் திரனாய்வு, இலக்கிய வரலாறு, கவிதை, சிறுகதை, புதினம் போன்றவை வளர்ச்சிக் கண்டுள்ளது.



Share:

Wednesday, November 23, 2016

உயர்திணை ,அஃறிணை இரண்டிற்கும் பொதுவான பண்புகள்:

உயர்திணை ,அஃறிணை இரண்டிற்கும் பொதுவான பண்புகள்:

உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். 


  1. தோன்றல்
  2. மறைதல்
  3. வளர்தல்
  4. சுருங்கல்
  5. நீங்கல்
  6. அடைதல்
  7. நடுங்கல்
  8. இசைத்தல்
  9. ஈதல்
Share:

அஃறிணை பண்புகள் யாவை ?



அஃறிணை பண்புகள்
வடிவங்கள்
  1. வட்டம்
  2. இருகோணம்
  3. முக்கோணம்
  4. சதுரம் முதலிய பலவகைளும்
நாற்றங்கள்
  1. நறுநாற்றம்
  2. துர்நாற்றம்
வண்ணங்கள்
  1. வெண்மை
  2. செம்மை (சிவப்பு)
  3. கருமை
  4. பொன்மை (மஞ்சள்)
  5. பசுமை
சுவைகள்
  1. கைப்பு (கசப்பு)
  2. புளிப்பு
  3. துவர்ப்பு
  4. உவர்ப்பு
  5. கார்ப்பு (காரம்)
  6. இனிப்பு
எட்டு ஊறுகள் அல்லது தொடு உணர்வுகள்:
  1. வெம்மை (வெப்பம்)
  2. தண்மை (குளிர்ச்சி)
  3. மென்மை, வன்மை
  4. நொய்மை (நைதல்)
  5. திண்மை
  6. இழுமெனல் (வழவழப்பு)
  7. சருச்சரை (சொரசொரப்பு)
Share:

உயர்திணை பண்புகள் யாவை ?

உயர்திணை பண்புகள்

உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார்.
  1. அறிவு
  2. அருள்
  3. ஆசை
  4. அச்சம்
  5. மானம்
  6. நிறைவு
  7. பொறை (பொறுமை)
  8. ஓர்ப்பு (தெளிவு)
  9. கடைப்பிடி
  10. மையல் (மயக்கம்)
  11. நினைவு
  12. வெறுப்பு
  13. உவப்பு (மகிழ்வு)
  14. இரக்கம்
  15. நாண்
  16. வெகுளி (கோபம்)
  17. துணிவு
  18. அழுக்காறு (பொறாமை)
  19. அன்பு
  20. எளிமை
  21. எய்த்தல் (சோர்வு)
  22. துன்பம்
  23. இன்பம்
  24. இளமை
  25. மூப்பு
  26. இகல் (பகை),
  27. வென்றி (வெற்றி)
  28. பொச்சாப்பு (பொல்லாங்கு)
  29. ஊக்கம்
  30. மறம்
  31. மதம் (வெறி)
  32. மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும். இவை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் பகுதியில் காட்டப்பட்டுள்ளன.
Share:

உரிச்சொல் என்றால் என்ன?

உரிச்சொல்:

  •   மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல்.
  உதாரணம் :சாலப் பெரிது – உரிச்சொல்

   உரிச்சொல் இருவகைப்படும்

  • ஒருபொருட்குறித்த பலசொல்
  • பலபொருட்குறித்த ஒருசொல்
சான்று:
ஒரு பொருள் குறித்த பல சொல்
  • சாலப்பேசினான்.
  • உறுபுகழ்.
  • தவஉயர்ந்தன.
  • நனிதின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரேபொருளையுணர்த்துவன.

பலபொருட்குறித்த ஒருசொல்

  • கடிமனை - காவல்
  • கடிவாள் - கூர்மை
  • கடிமிளகு - கரிப்பு
  • கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும்வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பலபொருள்களையுணர்த்தும்


உரிச்சொல் பண்புகள் :  

உயர்திணை பண்புகள்

அஃறிணை பண்புகள்
இரண்டிற்கும் பொதுவான பண்புகள்:

Share:

இடைச்சொல் என்றால் என்ன?

 இடைச்சொல்:

  • அணிகலன் செய்யப் பொன்னுக்கு இடையே இருந்து உதவும் இடைக்கருவிகள் போலப் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடைநிற்பது இடைச்சொல்
உதாரணம் :மரத்தை = மரம் அத்து ஐபடித்தனள் = படி த் அன் அள் இடைச்சொல்
Share:

வினைச்சொல் என்றால் என்ன?

வினைச்சொல்:

  •          தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல்.
  •    உதாரணம் :படித்தான்படிக்கிறான்படிப்பான் – வினைச்சொல்
           வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் அல்லது ஓடுதல் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது அல்லது வீழ்தல் வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.
முற்று இருவகைப்படும். அவை
  • தெரிநிலை வினைமுற்று
  • குறிப்பு வினைமுற்று
எச்சம் இரண்டு வகைப்படும். அவை
  • பெயரெச்சம்
  • வினையெச்சம்
Share:

பெயர்ச்சொல் என்றால் என்ன ?

  • பெயர்ச்சொல்:

  •    பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல்
  • பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
    • பொருட் பெயர்
    • இடப் பெயர்
    • காலப் பெயர்
    • சினைப் பெயர்
    • பண்புப் பெயர்
    • தொழிற் பெயர்
    என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
      உதாரணம் :மரம்கண்பெண் – பெயர்ச்சொல்
Share:

Tuesday, November 22, 2016

தமிழ் இலக்கணம் சிறப்பியல்புகள்

  • எழுத்துசொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும்.
  •     பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் இலக்கியத்தின் உள்ளடக்கத்திற்கு இலக்கணம் கூறுவது ஆகும்.
  •   யாப்பிலக்கணம் என்பது இலக்கியம் எழுதப்படும் செய்யுளின் இலக்கணம் கூறுவதாகும். யாப்பிலக்கணத்தின் ஒரு வளர்ச்சியாகப் பாட்டியல் இலக்கணம் தோன்றியது.
  •   பாட்டியல் இலக்கணம் இலக்கிய வடிவங்களினது இலக்கணத்தைக் கூறுகிறது. பிள்ளைத்தமிழ்உலாதூது போன்ற இலக்கியங்களின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் இடம்பெற்றுள்ளது.
  •    அணி இலக்கணம் செய்யுளில் அமையும் உவமைஉருவகம் முதலிய அணிகளின் இலக்கணத்தைக் கூறுகிறது.

Share:

தொடை (யாப்பிலக்கணம்)

தொடை (யாப்பிலக்கணம்)


தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும்அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை

தொடை வகைகள்

தொடைகள் பலவகைப் படுகின்றன. இவை,
1.   மோனைத் தொடை
2.   இயைபுத் தொடை
3.   எதுகைத் தொடை
4.   முரண் தொடை
5.   அளபெடைத் தொடை
6.   அந்தாதித் தொடை
7.   இரட்டைத் தொடை
8.   செந்தொடை
என்பனவாகும். இவற்றுள் மோனைஎதுகைமுரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் சம்பந்தப்பட்டிருக்கஇயைபுத் தொடை அடிகளின் இறுதிச் சீர் தொடர்பாக அமைகின்றது.

தொடை விகற்பங்கள்

மேலே கண்ட எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்துஎட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் "விகற்பங்கள்" எனப்படுகின்றன. மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.
1.   அடி
2.   இணை
3.   பொழிப்பு
4.   ஒரூஉ
5.   கூழை
6.   மேற்கதுவாய்
7.   கீழ்க்கதுவாய்
8.   முற்று
   மோனைஎதுகைமுரண்அளபெடைஇயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதிஇரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.



Share:

Blog Archive