பகுத்தறிவைக் கொñடு , காரணம் காணும் அறிவு கொண்டு கலைகளைப் படைத்தல் இயலாது என்கிறார் கீட்ஸ்.
எண்ணி எண்ணிச் சிந்தனையில் வாழ்வதைவிட, உணர்ந்து உணர்ச்சியில் வாழும் வாழ்வே வேண்டும் என அவர் ஏங்கியதற்குக் காரணம் உள்ளம் விரும்புமாறு அமையும் கற்பனை அவரிடம் சிறந்திருந்தமையே ஆகும்.
ரிச்சர்ட்ஸ் என்பவர் கற்பனை உணர்த்தும் சொல்லுக்கு அறுவகை பொருள் தருகின்றார்.
· மனிதக்கண்ணில் பொருள் காணுதல்
· உவமை உருவகம் முதலியவற்றால் பொருûகளை உருவாக்கிக் காணுதல்
· பிறருடைய மனநிலையை~ இன்பத்துன்பங்களை உணர்தல்
· வெவ்வேறாக உள்ள பொருள்களை இயைத்துக் காணுதல்.
· வாழ்க்கையின் அனுபவத்தை வெவ்வேறுவகையில் அமைத்துக் காணுதல்.
· பொருள்களை உள்ளவாறே உணரும்போது, மாறுபட்ட பொருள்களை நிறுத்தக் காணல்.
உள்ளவாறு அமையும் கற்பனைக்குப் பொருள்களை ஒழுங்கு படுத்தலும் அழகுற அமைத்தலும் தேவை; உள்ளம் விழையுமாறு அமையும் கற்பனைக்கோ, உள்ளவற்றின் சிலவற்றைக் கூட்டலும் கழித்தலும் தேவையாகின்றன.
உணர்ச்சி
ஐந்து வகையான உணர்ச்சிகள் இலக்கியம் நொடிது வாழும் என்கிறார் வின்செஸ்டர்.
· நியாயமான, தக்க உணர்ச்சி, நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமைவது.
· ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டியது; ஆழம் உடையது.
· தொடர்ந்து ஒரு நிலையாக அமையும் உனர்ச்சி; பொருந்ததாதும் வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது; வலிந்து கொñடு வரப்படாமல் இயல்பாக அமைவது.
· வாழ்க்கையில் பல கோணங்களை விளக்குமாறு பலவகை உணர்ச்சிகள் கூடி அமைதல்
· மிக விழுமிய உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள் காரணமாகவோ, புலனின்பம் காரணமாகவோ அமையும் உணர்ச்சிகளைவிட உயர்வுடையதாய். நீதியின் காரணமாகவோ அறத்தின் காரணமாகவோ அமைதல்.
பல்வகை உணர்ச்சிகள் - மகிழ்ச்சி, வேடிக்கை, கவலையற்ற மனநிறைவு முதலியவற்றை விட அச்சம் துயரம், கவலை போன்ற உணர்ச்சிகளையுடைய இலக்கியம் மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றது.
ஷேக்ஸ்பியர் இன்பியல் நாடகத்தைவிட துன்பியல் நாடகங்கள் போற்றப்படுகின்றது என்கிறார்.
கலைஞர்களின் உள்ளம் அச்சம், துயரம் முதலிய உணர்ச்சிகளால் பெரிதும் தாக்குண்டு ஆழ்ந்து உணரும் நிலை எய்துகிறது. அந்த உணர்ச்சிகள் ஆழமும் ஆற்றலும் உடையவனாக அமைகின்றன.
வின்செஸ்டர் - பாட்டில் உணர்ச்சியை அமைக்கும் புலவர் பாட்டின் வடிவத்திலும் அமைக்கலாம்; பாட்டின் பொருளிலும் அமைக்கலாம்.
பாட்டில் சொற்பபொருளிலும் கருத்திலும் உணர்ச்சியை அமைத்தலே, அதன் வடிவத்தில் அமைத்தலைவிட சிறந்தது என்கிறார்.
உணர்ச்சி பாட்டின் வடிவத்திலும் பொருளிலும் ஒருங்கே புலப்படுமாறு அமைந்த பாட்டே சிறந்தது.
வடிவம்
ஒருவரின் உள்ளத்தின் துயரம் அவருடைய கண்ணீரில் புலப்பட, அந்தக் கண்ணீரைக் கண்ட மற்றொருவரின் உள்ளத்தைத் தாக்குவது போல கலைஞரின் உணர்ச்சி அனுபவம் அவர் படைத்த கலையின் வடிவத்தில் புலப்பட, அதை கற்பவரின் உள்ளத்திலும் அதே அனுபவம் விளங்குகிறது. ஆகவே, அனுபவம் ஓர் உள்ளத்திலிருந்து மற்றோர் உள்ளத்திற்குப் பரவுவதற்குக் கலையின் வடிவம் பயன்படுகிறது.
தமிழ் இலக்கிய அறிமுகம்
· சங்கக் காலம் ~ மூவேந்தராட்சி பொற்காலம்
· சோழர் காலம் - சோழ வேந்தர் ஆட்சி நற்காலம்
· தற்காலம் - குடியாட்சி மறுமலர்ச்சி ஆட்சி காலம்
· சங்க மருவிய காலம் ~ இருண்ட காலம்
· பிற்காலம் ~ வறண்ட காலம்
சங்க காலம் (கி.மு. 500 - கி.பி.200)
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சமுதாயப்பாடல்களாக அமைந்தன.
பாடற்பொருளாகì காதலும் வீரமும் அமைந்தன.
புறமாகிய இயற்கை சூழலும், அகமாகிய அன்றாட வாழ்வு முறையும் நிலையாகக் கொண்டு, அகம், புறம் எனும் இரு திணைகளாகத் பிரிக்கப்பட்டன.
இக்கால பிற்பகுதியில் தொல்காப்பியம், பதினெண் மேற்கணக்கு நூல்கள் விளங்குகின்றன.
சங்க மறுவிய காலம் (கி.பி.200 - 600)